செய்திகள்
புஜாரா

முதல்தர கிரிக்கெட் போட்டியில் 50-வது சதத்தை பூர்த்தி செய்தார் புஜாரா

Published On 2020-01-12 09:32 GMT   |   Update On 2020-01-12 09:32 GMT
டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளில் இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா 50 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் புஜாரா. சவுராஸ்டிராவை சேர்ந்த அவர் கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று சதம் அடித்தார்.

இந்த செஞ்சூரி மூலம் புஜாரா புதிய மைல் கல்லை தொட்டார். டெஸ்ட் மற்றும் முதல் தர போட்டியை சேர்த்து அவர் 50-வது சதத்தை எடுத்தார். டெஸ்டில் 18 சதமும், உள்ளூர் முதல் தர போட்டிகளில் 32 செஞ்சுரியும் அவர் அடித்துள்ளார்.

முதல் தர போட்டியில் 50 சதம் எடுத்த 9-வது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் 4-வது இடத்தில் 31 வயதான புஜாரா இருக்கிறார்.

குக் (இங்கிலாந்து) 65 சதத்துடனும், ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா) 52 சதத்துடனும், இந்தியாவின் உள்ளூர் போட்டியில் விளையாடும் வாசிம் ஜாபர் 57 சதத்துடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
Tags:    

Similar News