செய்திகள்
விபத்து

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் கயிறு சிக்கி விபத்து- விவசாயி பலி

Published On 2021-02-23 14:22 GMT   |   Update On 2021-02-23 14:22 GMT
குடவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் கயிறு சிக்கி நடந்த விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது48). விவசாயி. இவர் நேற்று முன்தினம் குடவாசலில் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்க தனது மோட்டார் சைக்கிளில் குடவாசலுக்கு சென்று கொண்டிருந்தார்.

சேங்காலிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு உள்ள பம்புசெட் அருகில் கயிற்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு திடீரென சாலையின் குறுக்கே வந்தது.

இதனால் மாடு கட்டப்பட்டிருந்த கயிறு மோட்டார் சைக்கிளில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்த கீழே விழுந்த மூர்த்தி படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் உத்ராபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News