செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2019-10-05 03:48 GMT   |   Update On 2019-10-05 03:48 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 19 ஆயிரத்து 333 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 848 கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

இன்று காலை இது மேலும் அதிகரித்து 19 ஆயிரத்து 333 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீரும் கால்வாய் பாசனத்திற்காக 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 118.87 அடியில் இருந்து இன்று காலை 118 அடியாக குறைந்துள்ளது.
Tags:    

Similar News