செய்திகள்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி-ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அதிகாரி ஆலோசனை
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி., மூர்த்தி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், மீனாட்சி ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள், பண்ணை குட்டை, மரக்கன்றுகள் நடுதல் , 100 நாள் வேலை திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.