செய்திகள்
கோப்புபடம்

நாகர்கோவிலில் 2 பெண்கள் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2021-06-14 14:19 GMT   |   Update On 2021-06-14 14:19 GMT
நாகர்கோவிலில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகா்கோவில்:

நாகர்கோவில் பட்டகசாலியன்விளை மணவேல் காம்பவுண்டு பகுதியை சேர்ந்த சூசை லாரன்ஸ் மகள் லூசி ஷாலினி (வயது 32). இவருக்கும் மதுரையை சோ்ந்த செந்தில் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். லூசி ஷாலினி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தனது தந்தை வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீ காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த வேலு மனைவி வெள்ளச்சி (74). கணவன், மனைவி இருவரும் ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்கள். வெள்ளச்சி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News