செய்திகள்
கோப்புபடம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இளநிலை உதவியாளர் பலி

Published On 2021-10-10 10:04 GMT   |   Update On 2021-10-10 10:04 GMT
நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இளநிலை உதவியாளர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வடகரையாத்தூரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 28). இவர் கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். நாமக்கல்லில் வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் அருகே வந்தபோது, முன்னாள் சென்ற வாகனத்தை அவர் முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி சுகந்தி நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News