செய்திகள்
கைது

கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-01-18 06:29 GMT   |   Update On 2021-01-18 06:29 GMT
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தாந்தோணிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காளியப்பனூரை சேர்ந்த தமிழரசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சதீஷ்குமார் (31) என்பவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News