செய்திகள்
நகை பறிப்பு

நச்சலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

Published On 2020-10-30 12:35 GMT   |   Update On 2020-10-30 12:35 GMT
நச்சலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நச்சலூர்:

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள இனுங்கூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34). இவர் கடந்த 27-ந்தேதியன்று தனது மொபட்டில் புதுப்பட்டியில் இருந்து நச்சலூருக்கு சொந்த வேலை காரணமாக சென்றார். பின்னர் அதே மொபட்டில் மீண்டும் புதுப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இந்தநிலையில் நச்சலூர் அருகே ஓந்தாம்பட்டிக்கும்-புதுப்பட்டிக்கும் இடையே வாரிப்பாலம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர்.

பின்னர் கிருஷ்ணவேணியிடம் கண் இமைக்கும் நேரத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி திருடன்... திருடன்... என சத்தம்போட்டார். ஆனால் மர்மநபர்கள் தாலிச் சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணவேணி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மொபட்டில் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News