செய்திகள்
விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய வீரர்கள்

அசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது

Published On 2021-03-04 11:47 GMT   |   Update On 2021-03-04 11:47 GMT
அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் சேர்த்தார்.
அகமதாபாத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் சிப்லி (2), கிரவுலி (9) இருவரையும் சுழற்பந்து வீரர் அக்சர் பட்டேல் விரைவில் வெளியேற்றினார். 

அதன்பின்னர் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. எனினும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் எதிர்பார்த்த ரன் ரேட்டை எட்ட முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டும் சரிந்தது.

75.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். லாரன்ஸ் 46 ரன்களும், பேர்ஸ்டோவ் 28 ரன்களும், போப் 29 ரன்களும் சேர்த்தனர்.

இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட், சிராஜ் 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
Tags:    

Similar News