செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே திருமணம் தள்ளிப்போனதால் எலக்ட்ரீசியன் தற்கொலை

Published On 2020-10-14 13:44 GMT   |   Update On 2020-10-14 13:44 GMT
வில்லியனூர் அருகே திருமணம் தள்ளிப்போனதால் விரக்தி அடைந்த எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 30). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் சரியான வரன் அமையாமல் திருமணம் தள்ளிக்கொண்டே போனது.

இதனால் வெங்கடேசன் நாடி ஜோதிடம் பார்த்தார். அப்போது ஜோதிடர் திருமணம் ஆக 5 வருடங்கள் ஆகும் என கூறியதாக தெரிகிறது. திருமணம் தள்ளிப்போவதை நினைத்து அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News