செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

Published On 2021-07-16 09:50 GMT   |   Update On 2021-07-16 09:50 GMT
புதுவையில் இதுவரை 1,19,509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,16,486 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் நேற்று 6 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 87 பேரும், காரைக்காலில் 7 பேரும், மாகியில் 10 பேரும் அடங்குவர். ஏனாமில் புதிதாக தொற்று பாதித்தவர் யாரும் இல்லை.

கொரோனா பாதித்தவர்களில் 24 பேர் ஜிப்மர் மருத்துவமனை, 51 பேர் கதிர்காமம் கொரோனா மருத்துவமனை, 50 பேர் கோவிட் கேர் சென்டர்கள் என 198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,055 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

ஒட்டு மொத்தமாக தற்போது 1248 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 161 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

புதுவை கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி.வி. நகரை சேர்ந்த 51 வயது ஆண், மூலக்குளத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1775 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் இதுவரை 1,19,509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,16,486 பேர் குணமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News