செய்திகள்
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்:
திருவண்ணாமலையை அடுத்த வடஆண்டாபட்டு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கு சொந்தமான ஹாலோ பிரிக்ஸ் கல் தயாரிக்கும் பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் திரிலோகி (வயது 30) என்பவர் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார்.
இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபாலை கைது செய்தனர்.