உள்ளூர் செய்திகள்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்ட காட்சி.

சுத்திகரிப்பு மையம் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - சாய ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை

Published On 2022-01-13 07:42 GMT   |   Update On 2022-01-13 07:42 GMT
சாய ஆலைகள் செலுத்தும் ஜி.எஸ்.டி.,வரி, திரும்ப பெறமுடியாமல் அரசிடம் தேக்கமடைகிறது. அந்த வகையில் 200 கோடி ரூபாய் திரும்ப பெறப்படாமல் அரசிடம் தேங்கியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கதலைவர் காந்திராஜன், பொதுச் செயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோர், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜியுடன் சென்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்து ஆலைகள், சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. சாயமேற்றும் கட்டணத்துக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி சுத்திகரிப்பு மையங்களுக்கு, 12 சதவீத வரி நடைமுறையில் உள்ளது. 

அதனால், சாய ஆலைகள் செலுத்தும் ஜி.எஸ்.டி.,வரி, திரும்ப பெறமுடியாமல் அரசிடம் தேக்கமடைகிறது. அந்த வகையில் 200 கோடி ரூபாய் திரும்ப பெறப்படாமல் அரசிடம் தேங்கியுள்ளது. 

சாய கட்டணம் மீதான ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதமாக உயர்த்த மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, சாய ஆலைக்கான வரியை, 12 சதவீதமாக உயர்த்தி, விரைந்து அமல்படுத்த வேண்டும். 

அல்லாத பட்சத்தில் சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்களை, சேவை துறையிலிருந்து, ஜாப்ஒர்க் ஆக மாற்ற வேண்டும். சுத்திகரிப்புகட்டணம் மீதான வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News