உள்ளூர் செய்திகள்
மேலப்பாளையத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மேலப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்தார்.
நெல்லை:
மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் 2-ம் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 78). இவரது மனைவி சுப்புலெட்சுமி (76), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் கணவர் - மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் இன்று வீட்டு மாடிக்கு சென்ற சுப்புலெட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் 2-ம் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 78). இவரது மனைவி சுப்புலெட்சுமி (76), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் கணவர் - மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் இன்று வீட்டு மாடிக்கு சென்ற சுப்புலெட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.