செய்திகள்
பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்

அண்ணா பிறந்தநாள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

Published On 2020-09-15 04:58 GMT   |   Update On 2020-09-15 04:58 GMT
பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை:

காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Tags:    

Similar News