செய்திகள்
திருவண்ணாமலை இளம் பெண் பாலியல் பலாத்காரம்
திருவண்ணாமலை இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
திருவண்ணாமலை:
திருவண்ணாலை அருகே உள்ள ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம் பெண்னும் காதலித்து வந்து உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது பார்த்தீபன் வீட்டிற்குள் நுழைந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இளம் பெண் கர்ப்பமானார். இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.