இந்தியா
இந்தியாவில் இன்று ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி
நாட்டில் இதுவரை 127.50 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அதன்பின், கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த இரண்டு மாதத்துக்குப் பிறகு இந்த இலக்கு அடையப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஜாவத் புயல் வலுவிழந்தது... ஒடிசா, ஆந்திராவுக்கு சற்று நிம்மதி