உள்ளூர் செய்திகள்
மதுரை தேவாலயங்களில் இன்று புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மதுரை
கிறிஸ்தவர்களின் தவக் காலத்தின் இறுதிகட்டமாக இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 2ந்தேதி சாம்பல் புதனில் தொடங்கி 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படும். கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவார்கள்.
கடந்தவாரம் குருத்தோலை ஞாயிற்று பவனி நடந்தது. நேற்று பெரியவியாழன் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிக்கும் இறுதிகட்டமாக இன்று உபவாசம் கடைபிடித்து புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மதியம்வரை மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்ட போது கூறிய 7வார்த்தைகளின் அடிப்படையில் வழிபாடுகள் நடந்தது. புனித வெள்ளியை யொட்டி மதுரை நரிமேடு கதீட்ரல் பேராலயம், கீழவாசல், தெற்குவாசல், புதூர், அண்ணாநகர், மேல வாசல், வில்லாபுரம், மாடக் குளம், பைபாஸ் ரோடு, காளவாசல், கோச்சடை, கூடல்நகர், தபால்தந்திநகர் உள்ளிட்ட அனைத்து தேவா லயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்றன. இந்த பிரார்த் தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து 3ம்நாள் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள் (17ந்தேதி) கொண் டாடப்படுகிறது. அன்று அதிகாலை அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு நடத்துகிறார்கள்.