செய்திகள்
கோப்புப்படம்

உள்ளாட்சி தேர்தல்- திருப்பத்தூர் மாவட்டத்தில் 7819 பேர் மனுதாக்கல்

Published On 2021-09-23 04:34 GMT   |   Update On 2021-09-23 04:34 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2125 உள்ளாட்சி பதவிகளுக்கு 7819 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2125 உள்ளாட்சி பதவிகளுக்கு 7819 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 104 பேரும், 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 683 பேரும், 208 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1118 பேரும், 1779 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5914 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News