செய்திகள்
கைது

கண்ணமங்கலம் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-09-18 10:14 GMT   |   Update On 2020-09-18 10:14 GMT
கண்ணமங்கலம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று ரேணுகொண்டாபுரம், ராமநாதபுரம் ஆகிய கிராமங்களில் ரோந்து சென்றனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த வாசு (வயது 62), ரேணுகொண்டபுரத்தை சேர்ந்த முருகேசன் (70) ஆகியோர் தங்கள் வீட்டின் பின்புறம் மதுவிற்ற போது போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News