செய்திகள்
கண்ணமங்கலம் அருகே மது விற்ற 2 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று ரேணுகொண்டாபுரம், ராமநாதபுரம் ஆகிய கிராமங்களில் ரோந்து சென்றனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த வாசு (வயது 62), ரேணுகொண்டபுரத்தை சேர்ந்த முருகேசன் (70) ஆகியோர் தங்கள் வீட்டின் பின்புறம் மதுவிற்ற போது போலீசார் கைது செய்தனர்.