செய்திகள்
மாணவி கடத்தல்

கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தல்- பெற்றோர் போலீசில் புகார்

Published On 2019-09-12 11:40 GMT   |   Update On 2019-09-12 11:40 GMT
கல்லூரிக்கு சென்ற மாணவியை வாலிபர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை அருகே தமிழக பகுதியான நல்லாவூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திவ்ய பாரதி (வயது 19).

இவர், புதுவை பாக்க முடையான்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று திவ்யபாரதி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் திவ்யபாரதி இல்லை. இதையடுத்து முருகன் தனது மகள் மாயமானது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.

புகாரில் தனது மகள் திவ்யபாரதியை அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News