செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,615-ஆக உள்ளது.
விருதுநகர்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,02,022 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,071-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,80,184 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,615-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 16,880 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 235 பேர் உயிரிழந்துள்ளனர்.