ஆன்மிகம்
வரலட்சுமி நோன்பையொட்டி வீடுகளில் சிறப்பு வழிபாடு

வரலட்சுமி நோன்பையொட்டி வீடுகளில் சிறப்பு வழிபாடு

Published On 2021-08-21 04:10 GMT   |   Update On 2021-08-21 04:21 GMT
ஏராளமான சுமங்கலி பெண்கள் அவரவர் இல்லங்களில் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தனர். இதில் உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டு சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு லட்சுமி சகஸ்ர நாமம் சொல்லி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இந்துக்களின் முக்கிய விரதங்களில் வரலட்சுமி நோன்பும் ஒன்று. ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பவுர்ணமி நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் அவரவர் இல்லங்களில் வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். கணவனின் நலம், தாலி பாக்கியம், இல்லத்தில் செல்வம் நிலைக்க இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

அதன்படி ஏராளமான சுமங்கலி பெண்கள் அவரவர் இல்லங்களில் நேற்று வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தனர். இதையொட்டி வீட்டில் கோலமிட்டு, வாழை இலையில் அரிசி, கும்பம், தங்க ஆபரணங்கள், மாவிலைக்கொத்து, தேங்காய் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டு சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு லட்சுமி சகஸ்ர நாமம் சொல்லி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமத்தையும் பிரசாதமாக வழங்கினர்.
Tags:    

Similar News