உள்ளூர் செய்திகள்
கூடங்குளத்தில் தொழிலாளி மர்மச்சாவு
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நெல்லை:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சிவ நாராயண் ஷா (வயது 77). இவரும் இவரது மகன் உமேஷ் குமார் ஷா (26) என்பவரும் குடும்பத்துடன் கூடங்குளத்தில் தங்கியிருந்து, அணுமின் நிலையத்தில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சிவ நாராயண் ஷாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சிவநாராயண் ஷா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று அவர் அருகில் உள்ள முருகானந்தபுரம் கிராமப்பகுதியில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.
அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.
கூடங்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.