உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

இரணியல் அருகே முதியவரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-04-17 07:22 GMT   |   Update On 2022-04-17 07:22 GMT
இரணியல் அருகே முதியவரை தாக்கி கொலை மிரட்டல்
கன்னியாகுமரி:

இரணியல் அருகே தலக்குளம் புதுவிளையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்த போது சம்பள பணத்தை அவரது தம்பி கிருஷ்ணன் பெயரில் அனுப்பி வந்துள்ளார். அவரது தம்பி, முத்துக்குமார் பெயரோடு அதிகாரப்பத்திரம் மூலம் சொத்து வாங்கியதாக தெரிகிறது.

சமீபத்தில் முத்துக்குமாரின் தம்பி கிருஷ்ணன் இறந்து விட்டார். எனவே அவரது மனைவியிடம்  சொத்து ஆவணங்களை முத்துக்குமார் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை  அவரது தம்பியின் மனைவி மற்றும் உறவினர்கள் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News