செய்திகள்
விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டின் ஜன்னதை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகர் புதிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 63). இவரது மனைவி அம்பிகா (57). இவர் பெண்ணாடம் அருகே உள்ள மேலூர் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அன்பழகனும் அவரது மனைவி அம்பிகாவும் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 6-ந்தேதி அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
இதை அறிந்த மர்ம மனிதர்கள் வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அங்கிருந்த 45 பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.6 ஆயிரம், கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
ஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று இரவு அன்பழகன், அவரது மனைவி அம்பிகா ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். பின்பு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு பொருட்கள் சிதறிகிடப்பதையும், பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த நகை-பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மர்ம மனிதர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மொத்தம் கொள்ளைபோன நகை பணத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்
இதுகுறித்து அன்பழகன் விருத்தாசலம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் கொள்ளை நடத்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க விழுப்புரத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியை வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகர் புதிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 63). இவரது மனைவி அம்பிகா (57). இவர் பெண்ணாடம் அருகே உள்ள மேலூர் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அன்பழகனும் அவரது மனைவி அம்பிகாவும் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 6-ந்தேதி அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
இதை அறிந்த மர்ம மனிதர்கள் வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அங்கிருந்த 45 பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.6 ஆயிரம், கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
ஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று இரவு அன்பழகன், அவரது மனைவி அம்பிகா ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். பின்பு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு பொருட்கள் சிதறிகிடப்பதையும், பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த நகை-பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மர்ம மனிதர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மொத்தம் கொள்ளைபோன நகை பணத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்
இதுகுறித்து அன்பழகன் விருத்தாசலம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் கொள்ளை நடத்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க விழுப்புரத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியை வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.