செய்திகள்
மாயம்

மங்களமேடு அருகே பெண் மாயம்

Published On 2021-08-22 11:01 GMT   |   Update On 2021-08-22 11:01 GMT
மங்களமேடு அருகே பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:

மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் மணிமேகலை(வயது 42). திருமணமாகாத இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும், வெளியே செல்லும் அவர் இரவில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் கீழப்புலியூர் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பரமசிவம் தனது மகளை ஊர் முழுவதும் தேடியும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News