செய்திகள்
கோவை அருகே விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி சுப்பாத்தாள் (வயது 80). இவர் நேற்று தனது பேரன் பெரியசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுண்டக்காமுத்தூரில் இருந்து தேவராஜ் நகர் ரோட்டில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த சுப்பாத்தாள் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியசாமி அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.