செய்திகள்
அரூரில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்- எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்
அரூரில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட தொடக்க விழா மற்றும் புகையில்லா பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவை எம்.எல்.ஏ. சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட தொடக்க விழா மற்றும் புகையில்லா பொங்கல் விழா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழாவினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் அரூர் சார் ஆட்சியர் பிரதாப் மற்றும் அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.