ஆன்மிகம்
திருவண்ணாமலை தீப திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை மகாதீப திருவிழா நடப்பதால் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்களை தடை செய்யக்கூடாது, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
வேலூர் கோட்ட இந்து முன்னணி சார்பாக ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி கோட்ட, மண்டல, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் நடந்தது. நகர தலைவர் நாகராஜன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் வரும் 19-ந்தேதி திருவண்ணாமலை மகாதீப திருவிழா நடப்பதால் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்களை தடை செய்யக்கூடாது, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். திருவிழா வெகு சிறப்பாக நடத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து நடத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் மகேஷ், கோட்ட தலைவர் ராஜேஷ், கோட்ட செயலாளர் ரவி, மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் 19-ந்தேதி திருவண்ணாமலை மகாதீப திருவிழா நடப்பதால் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்களை தடை செய்யக்கூடாது, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். திருவிழா வெகு சிறப்பாக நடத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து நடத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் மகேஷ், கோட்ட தலைவர் ராஜேஷ், கோட்ட செயலாளர் ரவி, மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.