ஆன்மிகம்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள்

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

Published On 2021-04-16 07:09 GMT   |   Update On 2021-04-16 07:09 GMT
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் கோவிலில் தேரோட்டம் நடைபெறாமல் விழா கோவில் வளாகத்திற்குள் உள் திருவிழாவாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நபர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். சித்திரை உற்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை சேனை முதல்வர் புறப்பாடு நடைபெறும். நாளை(சனிக்கிழமை) காலையில் கொடியேற்றம் நடைபெறும். இரவில் காப்புக்கட்டுதலுடன் முதல் நாள் உற்சவம் தொடங்கும்.

இதைதொடர்ந்து 2-ம் நாள் முதல் 8-ம் நாள்வரை தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி சிம்மம், அனுமார், கருடன், சேஷன், வெள்ளி யானை, தங்க தோளுக்கியானில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். 6-ம் நாளான 22-ந்தேதி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறும். 7-ம் நாளான 23-ந்தேதி மாலை சூர்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 25-ந்தேதி மாலை 4 மணியளவில் திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடைபெறும். இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெறும்.

26-ந்தேதி தேர் திருவிழா நடைபெறாமல் சுவாமி தங்கப்பல்லக்கில் கோவில் வளாகத்தில் தென்னமர வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். 12-ம் திருநாளான 28-ந்தேதி இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் சுவாமி வீதி புறப்பாடு வரும்போது சுவாமியை பின்
Tags:    

Similar News