விளையாட்டு
தீபக் சாஹர்

மன்னிப்பு கேட்ட தீபக் சாஹர் - காரணம் என்ன?

Published On 2022-04-16 11:48 GMT   |   Update On 2022-04-16 11:48 GMT
இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.14 கோடிக்கு தீபக் சாஹர் எடுக்கப்பட்டார்.
புதுடெல்லி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். 

கடந்த பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.

இதற்கிடையே, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் இருந்தபோது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தீபக் சாஹர் பங்கேற்க மாட்டார் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையி, நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனதற்கு தீபக் சாஹர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சாஹர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், அடுத்த சீசனில் முன்புபோல் வலிமையுடன் களமிறங்குவேன். தனக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ரசிகர்களின் ஆசிர்வாதம் தேவைப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News