செய்திகள்
கைது

செங்குன்றம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

Published On 2019-11-18 06:19 GMT   |   Update On 2019-11-18 06:19 GMT
செங்குன்றம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி என்ற இடத்தில் பஸ் நிலையத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். சந்தேகப்படும் படிநின்றிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் செங்குன்றத்தை சேர்ந்த சேகர், கலீல், பட்டாபிராமை சேர்ந்த அரவிந்த், லியோ பாட்சா என தெரியவந்தது.

இவர்கள் ஆந்திராவி இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலங்களாக்கி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்று வந்ததாக கூறினர். எனவே அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News