ஆன்மிகம்
கோவில் வளாகத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்த காட்சி.

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

Published On 2021-06-22 03:02 GMT   |   Update On 2021-06-22 03:02 GMT
வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 17-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று 6-ம் நாள் உற்சவம் நடைபெற்றது.

இதில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News