செய்திகள்
கோப்பு படம்.

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை- மீனவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

Published On 2020-10-17 12:32 GMT   |   Update On 2020-10-17 12:32 GMT
புதுவை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பம்:

புதுவையை அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 27), மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோர், குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

இதையடுத்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலைவாணன் மீது போக்சோ சட்டப்பிரிவில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News