லைஃப்ஸ்டைல்
பனை ஓலை கொழுக்கட்டை

இன்று கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை

Published On 2019-12-10 08:32 GMT   |   Update On 2019-12-10 08:32 GMT
கார்த்திகை தீபத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பனை ஓலை கொழுக்கட்டை மிகவும் பிரபலம். இன்று இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - முக்கால் கிலோ
கருப்பட்டி - அரை கிலோ
ஏலக்காய் - 8
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பனை ஓலை - தேவையான அளவு



செய்முறை:

ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
 
பச்சரிசியை ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

கடாயை காயவைத்து துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை போடவும்.
 
கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும்.

பின் இறக்கி வடிகட்டி மாவுடன் பிசையவும். ஓலையை அரை அடி நீளத்திற்கு நறுக்கி கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து ஒரு ஓலையில் நடுவில் வைத்து மற்றொரு ஓலையால் மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

செய்து வைத்தவைகளை இட்டித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 

அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News