செய்திகள்
நிர்பயா கொலை குற்றவாளிகள்

நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை

Published On 2020-03-20 06:12 GMT   |   Update On 2020-03-20 07:24 GMT
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்...
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 குற்றவாளிகளும் இன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த சம்பவம் மற்றும் இது தொடர்பான வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

• டிசம்பர்-16, 2012: டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார்.



• டிசம்பர்-17: டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நிர்பயா சேர்ப்பு.

• டிசம்பர்-17: பஸ் டிரைவர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, பவன் குப்தா, 17 வயது சிறுவன் டெல்லியில் கைது. அக்‌ஷய்குமார் சிங் அவுரங்கபாத்தில் கைது செய்யப்பட்டார்.

• டிசம்பர்-21: சப்தர்ஜங் மருத்துவமனையில், மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயா வாக்குமூலம்.

• டிசம்பர்-26: குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம்.

• டிசம்பர்-27: நிர்பயா மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

• டிசம்பர்-29: சிகிச்சை பலனின்றி நிர்பயா, அதிகாலை 2.15 மணிக்கு உயிரிழந்தார். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் பார்லிமெண்டில் தாக்கல்.

• ஜனவரி-3, 2013: பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் 5 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு. 6 பேரில் மைனர் குற்றவாளி வழக்கு மட்டும் சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றம்.

• ஜனவரி-17: டெல்லி சாகேட் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

• மார்ச்-11: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம்சிங் தூக்கிட்டு தற்கொலை. மற்ற 5 பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.

•ஆகஸ்டு-31: குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை.

• செப்டம்பர்-10: குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு. 13 பிரிவுகளில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

• செப்டம்பர்-13: நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

• மார்ச்-13, 2014: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்டு.

• மார்ச்-2: குற்றவாளிகள் இருவர், இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.

• ஜூலை-14: குற்றவாளிகளின் தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை.

• டிசம்பர் 15: மைனர் குற்றவாளியை விடுவிக்கக்கூடாது என, பா.ஜனதாவின் சுப்பிரமணியன்சாமி டெல்லி ஐகோர்ட்டில் மனு.

• டிசம்பர்-18: இம்மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

• டிசம்பர்-20: மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால், மைனர் குற்றவாளி விடுதலை.

• ஏப்ரல்-3, 2016: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை துவக்கம்.

• மே-5, 2017: அக்‌ஷய் குமார்சிங், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்த டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

• நவ-13: தீர்ப்பை எதிர்த்து, அக்‌ஷய் குமார் தவிர மற்ற 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு.

• ஜூலை-9, 2018: சீராய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

• அக்டோபர்-29, 2019: கருணை மனு தாக்கல் செய்ய குற்றவாளிகளுக்கு திகார் ஜெயில் நிர்வாகம், 7 நாள் காலக்கெடு விதித்தது.

• நவம்பர்-8: டெல்லி அரசிடம் வினய் சர்மா கருணை மனு.

• நவம்பர்-30: இதை தள்ளுபடி செய்த டெல்லி உள்துறை அமைச்சர், டெல்லி துணை நிலை கவர்னருக்கு மாற்றினார்.

• டிசம்பர்-2: கவர்னரும் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி அரசு முடிவெடுக்க அனுமதி.

• டிசம்பர்-6: கருணை மனுவை, உள்துறை அமைச்சகம், ஜனாதிபதிக்கு மாற்றியது. மனுவை தள்ளுபடி செய்ய, டெல்லி அரசு பரிந்துரை.

• டிசம்பர்-10: அக்‌ஷய்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு.

• டிசம்பர்-18: மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உத்தரவு.

• டிசம்பர் 19: குற்றம் நடந்தபோது நான் மைனர் என கூறிய பவன்குமாரின் மனு தள்ளுபடி.

• ஜனவரி-7, 2020: நான்கு குற்றவாளிகளையும், ஜனவரி 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட திகார் ஜெயில் நிர்வாகத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்.

• ஜனவரி-17: முகேஷ்சிங் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் நிராகரிப்பு.

• ஜனவரி-30: தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய அக்‌ஷய்குமார் மனுவை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

• பிப்ரவரி-1: வினய் சர்மா கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிப்பு.

• பிப்ரவரி-17: நான்கு பேரையும், மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி ஐகோர்ட்டு புதுவாரண்ட் பிறப்பித்தது.

• மார்ச்-5: பவன் குப்தா கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிப்பு.

• மார்ச்-19: முகேஷ் சிங் மேல் முறையீட்டு மனுவை, ஐகோர்ட்டு நிராகரிப்பு. நான்கு பேரையும் இன்று காலை, 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவு.

நள்ளிரவில் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட்டு தள்ளுப்படி செய்தது.

• மார்ச் 20:- சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக அதிகாலை 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததால் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

• மார்ச் 20 அதிகாலை 5.30 மணி: குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
Tags:    

Similar News