உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது

Published On 2022-01-22 08:10 GMT   |   Update On 2022-01-22 08:10 GMT
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 54 கூடுதலாகும்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித் தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 031 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 437 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 4,949 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாளைக்குள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து விடும்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த 7-ந் தேதி மாவட்டத்தில் 435 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரி த்து வண்ணம் இருந்து வருகிறது. 

இதனால் தற்போது 4 ஆயிரத்து 949 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது கடந்த 14 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News