செய்திகள்
தற்கொலை

கருமத்தம்பட்டி காட்டுப்பகுதியில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-20 09:36 GMT   |   Update On 2021-03-20 09:36 GMT
கருமத்தம்பட்டி காட்டுப்பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி:

கருமத்தம்பட்டி அடுத்த ராயர்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் உத்தரபிரதேசம் மாநிலம் பஜனூர் பகுதியை சேர்ந்த ஆதேஷ்குமார் (வயது 28) என்பவர் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஆதேஷ்குமார் திடீரென பணிபுரியும் பகுதியில் இருந்து மாயமானார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் உடன் பணிபுரியும் பணியாளர்கள் அவரை தேடினர்.

அப்போது தொழிற்சாலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆதேஷ்குமார் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News