ஆன்மிகம்
பழனி முருகனுக்கு தீர்த்தக்காவடி எடுத்து வரும் பக்தர்கள்

பழனி முருகனுக்கு தீர்த்தக்காவடி எடுத்து வரும் பக்தர்கள்

Published On 2021-03-19 04:09 GMT   |   Update On 2021-03-19 04:09 GMT
கோடை வெயில் தொடங்கும் இந்த பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை 27, 28-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

கோடை வெயில் தொடங்கும் இந்த பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் அடிவாரம், கிரிவீதியில் பக்தர்கள் காவடி எடுத்து கிரிவலம் செல்கின்றனர். மேலும் மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அடிவாரம் சன்னதி வீதி, கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், வெயில் அதிகமாக உள்ளதால் குடிநீர் வசதி செய்ய வேண்டும், பக்தர்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கயிற்றால் ஆன விரிப்புகளை விரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News