செய்திகள்
கூத்தாநல்லூர் அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை
கூத்தாநல்லூர் அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் சோலாட்சி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது18). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த சூரியபிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சூரியபிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் சோலாட்சி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது18). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த சூரியபிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சூரியபிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.