ஆன்மிகம்
நித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை

நித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை

Published On 2021-02-24 09:52 GMT   |   Update On 2021-02-24 09:52 GMT
நித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை நடந்தது. தொடர்ந்து, பெருமாள் திருப்பல்லக்கில் மாடவளாகம், வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாலையில், காரைக்கால் அம்மையார் கோவில் அருகில் நித்திய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. 8-ம் நாளான நேற்று வெண்ணெய்த்தாழி சேவை நடந்தது.

தொடர்ந்து, பெருமாள் திருப்பல்லக்கில் மாடவளாகம், வீதியுலா நடைபெற்றது. விழாவில், கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம், 27-ந் தேதி திருமலைராயன்பட்டினம் மாசிமக விழாவில் பங்கேற்கும் வண்ணம் பெருமாள் திருப்பல்லக்கில் வீதியுலா, மார்ச் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News