செய்திகள்
தூசி அருகே வேன் மோதி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா வடக்கல்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 41), கூலித்தொழிலாளி. இவரது மகன் விக்ரம் (14), மாமண்டூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மோட்டார் சைக்கிளில் அதே கிராமத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரின் மகன் ஆதி (14) என்பவரை மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார வைத்து மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார். வடகல்பாக்கம் -மாமண்டூர் சாலையில் செல்போன் டவர் எதிரில் எதிரில் வந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விக்ரம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை விக்ரம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வெம்பாக்கம் தாலுகா வடக்கல்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 41), கூலித்தொழிலாளி. இவரது மகன் விக்ரம் (14), மாமண்டூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மோட்டார் சைக்கிளில் அதே கிராமத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரின் மகன் ஆதி (14) என்பவரை மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார வைத்து மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார். வடகல்பாக்கம் -மாமண்டூர் சாலையில் செல்போன் டவர் எதிரில் எதிரில் வந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விக்ரம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை விக்ரம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.