செய்திகள்
விபத்து பலி

தொப்பூர் அருகே லாரி மோதி மூதாட்டி பலி

Published On 2021-10-25 09:33 GMT   |   Update On 2021-10-25 09:33 GMT
தொப்பூர் அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, இவரது மனைவி மாணிக்கம் (வயது 60). இவர் நேற்று சனிசந்தை என்ற இடத்தில் சாலையை கடந்தபோது, அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
Tags:    

Similar News