செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜு

தியேட்டர்கள் எப்போது திறப்பு? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு

Published On 2020-08-22 09:05 GMT   |   Update On 2020-08-22 09:05 GMT
தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1 ந்தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதால் தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News