செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு

Published On 2020-09-21 18:47 GMT   |   Update On 2020-09-21 18:47 GMT
அமெரிக்காவில் விமானம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர்.
நியூயார்க்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹோர்ஷூ பே நகரிலிருந்து லூசியானா மாகாணத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் இருந்தனர். இந்த விமானம் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது வானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி அங்குள்ள ஒரு விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.

அதன்படி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான அனுமதியை பெற்றார். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாராத வகையில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags:    

Similar News