செய்திகள்
தற்கொலை

மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-07-20 14:09 GMT   |   Update On 2021-07-20 14:09 GMT
குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனை சேர்ந்தவர் துர்காதேவி (வயது35). இவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி பிரச்சினை செய்ததால் துர்காதேவி கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தொடர்ந்து துர்காதேவியிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த தூர்காதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துர்காதேவி உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துர்காதேவி தாயார் கற்பகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News