செய்திகள்
கோப்பு படம்.

திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2020-10-23 10:53 GMT   |   Update On 2020-10-23 10:53 GMT
திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜோலார்பேட்டை:

சென்னை-கோவை ரெயில் மார்க்கத்தில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வீட்டு வசதி குடியிருப்பு பகுதி நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தில் தலை துண்டாகி நிலையில் பிணமாக கிடந்தார். 

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

இறந்தவர் மாநிறம் உடையவர் நீல நிற பேண்ட் மற்றும் கருப்பு கலரில் கட்டம் போட்ட முழு கை சர்ட் அணிந்து உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News