செய்திகள்
விபத்து

சுவாமிமலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2019-09-10 08:29 GMT   |   Update On 2019-09-10 08:29 GMT
சுவாமிமலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த செட்டிமண்டபம் நடுத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30).

இவரும், அவரது தம்பி கோபி (28) என்பவரும் கடந்த 8-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு செட்டிமண்டபம் நோக்கி வந்தனர்.

அவர்கள் சுவாமிமலை- கும்பகோணம் ரோட்டில் வந்தபோது ரமேஷ் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் கோபி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். ரமேசை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News