செய்திகள்
ஸ்கிரீன் பிரின்டிங்.

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஸ்கிரீன் பிரின்டிங் கட்டணம் உயர்வு

Published On 2021-10-12 06:38 GMT   |   Update On 2021-10-12 06:38 GMT
ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கட்டண உயர்வு வழங்கி கைகொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் சங்க அவசர செயற்குழு கூட்டம் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கெமிக்கல் விலை, விறகு, நிலக்கரி உள்பட எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. எனவே ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆடை உற்பத்தி நிறுவனங்கள்  கட்டண உயர்வு வழங்கி கைகொடுக்க வேண்டும்.

பிரின்டிங் நிறுவனங்கள் மூலப்பொருட்களை முன்பணம் செலுத்தி கொள்முதல் செய்யவேண்டியுள்ளது. எனவே பிரின்டிங் கட்டணத்தை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News